செப்டம்பர் முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் முழு தளர்வுகள்? இலங்கை அரசு ஆலோசனை!
இலங்கையில் கொரோனா பேரலை தாக்கமானது வெகுவாக குறைந்து வருவதால், செப்டம்பர் மாதம் வரை செலுத்தப்படும் தடுப்பூசியின் அளவுகளை பொறுத்து ஊரடங்கில் இருந்து முழு தளர்வுகளை அளிப்பது குறித்து அந்நாட்டு அரசு ஆலோசித்து வருகிறது.
ஊரடங்கு தளர்வுகள்
கொரோனா வைரஸ் தாக்கமானது வீழ்ச்சியடைந்து வரும் பட்சத்தில் நாடு முழுவதும் விதிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கில் இருந்து தளர்வுகளை அளிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த இலங்கை அரசின் ராணுவ தளபதியும், கொரோனா தடுப்பு நடவடிக்கை குழுவின் தலைவருமான சவேந்திர சில்வா கூறுகையில், ‘நாடு முழுவதும் கொரோனா பேரலை பாதிப்பானது குறைந்து வருகிறது.
இரு சக்கர வாகனத்தில் கண்ணாடியை அகற்றினால் வாரண்டி இல்லை – உயர் நீதிமன்றம் ஆணை!
அதன் அடிப்படையில் வரும் செப்டம்பர் மாதம் முதல் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டு விடும். அதற்கான முயற்சிகள் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகள் திட்டமிட்டபடி நிறைவேறும் பட்சத்தில் செப்டம்பர் மாத இறுதியில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தையும் தளர்த்த அரசு முடிவு செய்துள்ளது. அதை தொடர்ந்து 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் துவங்கும். இதற்கிடையில் கொரோனா தொற்றின் நிலை சீராக இல்லாதபட்சத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்.
TN Job “FB Group” Join Now
இலங்கையில் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் 11.5 மில்லியன் பேரும், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 14 மில்லியன் பேரும் உள்ளனர். இவர்களில் 5.7 மில்லியன் பேருக்கு அஸ்ட்ராஜெனகா நிறுவனத்தின் 1.2 மில்லியன் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இது தவிர கூடுதலாக 1.48 மில்லியன் டோஸ்கள் அஸ்ட்ராஜெனகா நிறுவனத்திடமும், 1.7 மில்லியன் தடுப்பூசிகளை கோவாக்ஸ் நாடுகளிடம் இருந்து கேட்டுள்ளோம். இவை ஜூலை 22 ஆம் தேதிக்குள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது’ என தெரிவித்துள்ளார்.