இரு சக்கர வாகனத்தில் கண்ணாடியை அகற்றினால் வாரண்டி இல்லை – உயர் நீதிமன்றம் ஆணை!

0
இரு சக்கர வாகனத்தில் கண்ணாடியை அகற்றினால் வாரண்டி இல்லை - உயர் நீதிமன்றம் ஆணை!
இரு சக்கர வாகனத்தில் கண்ணாடியை அகற்றினால் வாரண்டி இல்லை - உயர் நீதிமன்றம் ஆணை!
இரு சக்கர வாகனத்தில் கண்ணாடியை அகற்றினால் வாரண்டி இல்லை – உயர் நீதிமன்றம் ஆணை!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக வாகன விபத்துகள் மூலம் அதிகரித்து வரும் உயிர் சேதங்கள் காரணமாக சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் இருசக்கர வாகனங்களில் ரியர்வியூ கண்ணாடிகளை அகற்றினால் வாரண்டி இல்லை என தெரிவித்துள்ளது.

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்ததால் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு சாலை விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆனால் நாடு முழுவதும் சாலை விபத்துகள் அதிகமுள்ள மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இதனால் சாலை விபத்துகளை குறைக்க மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

சனி மற்றும் ஞாயிறு இரண்டு நாட்கள் முழு ஊரடங்கு – மாநில அரசு அறிவிப்பு!

வாகனங்களின் வேகத்தை குறைக்க வேண்டும், மது குடித்து விட்டு வாகனங்களை ஓட்டக் கூடாது, ஹெல்மெட் அணிய வேண்டும், சீட்பெல்ட் அணிந்து செல்ல வேண்டும், செல்போன் பேசிக் கொண்டு வாகனத்தை ஓட்டக் கூடாது என தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து செயல்படுத்தி வருகிறது. இந்த விதிமுறைகளை மீறுபவர்களுக்கு காவல் துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர்.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் வாகன விபத்துகளை தடுக்க மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் பின்னால் வரும் வாகனங்களை கண்காணிக்க இருசக்கர வாகனங்களில் ரியர் வியூ கண்ணாடிகள் பொருத்தப்படுகின்றன. ஆனால், இந்த கண்ணாடிகள் அகற்றப்படுவதால் விபத்துக்கள் அதிகரிக்கிறது, எனவே அந்த கண்ணாடி இல்லாத வாகனங்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இருசக்கர வாகனங்களில் கண்ணாடிகள் பொருத்த வேண்டும் என்ற விதியை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும். இருசக்கர வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்ணாடியை அகற்றினால், வாரண்டி கிடையாது என எச்சரித்து வாகன விற்பனையாளர்களிடம் அறிவுறுத்த வேண்டும். மேலும் புதிய வாரண்டி விதிகளை உருவாக்க வாகன உற்பத்தியாளர்களை அறிவுறுத்தலாம் என்று போக்குவரத்துத் துறை ஆணையருக்கு உத்தரவிடப்பட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!