சென்னையின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் – வாகன ஓட்டிகள் கவனத்திற்கு!
சென்னையில் இன்றும், நாளையும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல் தெரிவித்துள்ளது. மாற்றம் செய்யப்பட்டுள்ள புதிய பாதைகள் குறித்த விவரத்தை இப்பதிவில் காண்போம்.
போக்குவரத்து மாற்றம்:
தமிழகத்தில் மழையின் காரணமாக வாகனங்கள் செல்ல கூடிய வழக்கமான பாதை சேதமைடைந்துள்ளதாலும், பராமரிப்பு பணிகள், மேம்பாலம் கட்டுதல் போன்ற காரணங்களால் போக்குவரத்து பாதை மாற்றம் செய்யப்படும். அந்த வகையில் கடந்த மாதம் சென்னையில் உள்ள அசோக் நகர் காசி தியேட்டர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போக்குவரத்து பாதை மாற்றம் செய்யப்பட்டது. தற்காலிகமாக சோதனை அடிப்படையில் போக்குவரத்து பாதை மாற்றம் செய்யப்பட்டது. இதனால் போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்தப்பட்டதால் மாற்றம் செய்யப்பட்ட பாதை நிரந்தர பாதைகளாக அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது சென்னை பரங்கிமலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழக பொதுத்தேர்வு மாணவர்கள் கவனத்திற்கு – தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்க வழிமுறைகள்!
அப்பகுதியில் பாலாஜி மருத்துவமனை அருகில் ஜி.எஸ்.டி சாலை, உள் செல்லும் சாலையில் மற்றும் வெளி செல்லும் சாலையில் நெடுஞ்சாலை துறையினரால் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனால் இன்று (ஜூன் 25) மற்றும் நாளை (ஜூன் 26) ஆகிய இரு தினங்களும் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை வடபழனியில் இருந்து வரும் வாகனங்கள் தண்டுமா நகர் ‘யூ’வளைவு எடுத்து சிப்பெட் சந்திப்பில் வலதுபுறம் திருப்பி திரு.வி.க.தொழிற்பேட்டை சாலை வழியாக கிண்டி பேருந்து நிலையம் வந்து அண்ணா சாலை சென்றடையலாம். வடபழனியில் இருந்து வரும் வாகனங்கள் 100 அடி சாலையில் இடது புறமாக திருப்பி திரு.வி.க.தொழிற்பேட்டை சாலை வழியாக செல்ல வேண்டும்.
மேலும் கிண்டி பேருந்து நிலையம் வந்து அண்ணா சாலை சென்றடையலாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது என்று போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. ஜிஎஸ்டி சாலை விமான நிலையத்திலிருந்து கிண்டி நோக்கி செல்லும் வாகனங்கள் கத்திபாரா பாலத்தில் மேலே சென்று கிண்டி போகும் வழியில் எவ்வித மாற்றமும் இன்றி சென்றடையலாம். அதே போல பூந்தமல்லியில் இருந்து வரும் வாகனங்கள் மாற்றம் எதும் இன்றி வழக்கமான சாலையில் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.