தமிழகத்தில் அடுத்த 5 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

0
தமிழகத்தில் அடுத்த 5 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் அடுத்த 5 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் அடுத்த 5 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் தற்போது மழையின் அளவு குறைந்துள்ள நிலையில் கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அத்துடன் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது.

வானிலை மையம் தகவல்:

தமிழகத்தில் கடந்த வாரம் முழுவதும் அநேக இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து கொண்டிருந்தது. அதனால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு காணப்பட்டது. தற்போது பல்வேறு இடங்களில் மழையின் அளவு குறைந்து வருகிறது. இந்நிலையில் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 35 கிலோ மீட்டரில் பலத்த காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதனால் இப்பகுதிகளில் செல்லும் மீனவர்கள் தகுந்த பாதுகாப்புடன் செல்லுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றன. மேலும் வடகிழக்கு பருவக்காற்று காரணமாக இன்றும் மற்றும் நாளையும் கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும் அறிவித்துள்ளது.

Vijay TV Bigg Boss 5 Promo | இந்த வாரம் அனைவரும் நாமினேட் செய்யப்பட்டதாக அறிவித்த பிக்பாஸ்!

அத்துடன் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் மேலும் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 31 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை கொண்டிருக்கும். இதையடுத்து வருகிற டிசம்பர்-15 மற்றும் 16-ஆம் தேதிகளில் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் கண்ணம்மாவாக மீண்டும் களமிறங்கும் ரோஷினி? சிறப்பு எபிசோடு! ப்ரோமோ ரிலீஸ்!

மேலும் இன்று முதல் வருகிற டிசம்பர்-17ஆம் தேதி வரை குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 35 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. இதனால் மீனவர்கள் தகுந்த பாதுகாப்பு கருவிகளுடன் கடலுக்கு செல்லுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றன. அத்துடன் அன்று (டிச.17) தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!