சான்றிதழில் பிறந்த ஆண்டு மாறுபாடால் வேலை மறுப்பு – பணி வழங்க ஐகோர்ட் உத்தரவு!!
பிறப்பு சான்றிதழில் ஆண்டு மாறுபட்ட காரணமாக வேலைவாய்ப்பு மறுக்கப்பட்ட நபருக்கு நடத்துனர் பணி வழங்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
பணி வழங்க உத்தரவு:
தமிழகத்தில் அரசுப்பணிகளுக்கு ஊழியர்கள் தேர்வு செய்யப்படும் பொழுது அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு உள்ளிட்டவை நடத்தப்பட்டு வருகிறது. தேர்வு செய்யப்பட்ட நபர் அளித்த விபரங்கள், சான்றிதழில் உள்ள விபரங்களுடன் ஒத்துப்போகவில்லை என்றால் பணி ஆணை வழங்கப்படாது. தனது சான்றிதழில் பிறந்த ஆண்டு மாறுபாடு காரணமாக வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டது குறித்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
அரசுப்பள்ளிகளில் புதிய ஆசிரியர்கள் விரைவில் நியமனம் – விகிதாச்சார கணக்கெடுப்பு!!
நாராயணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில், தனது பிறப்பு சான்றிதழில் ஆண்டு மாறுபாடு காரணமாக தனக்கு பணி மறுக்கப்பட்டதாக கூறி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த 13 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த நிலையில் இன்று நீதிபதி சுரேஷ்குமார் விசாரணை செய்தார். அதன் முடிவில், 13 ஆண்டுகளுக்கு முன்னர் பணி ஆணை மறுக்கப்பட்டதாக வழக்கு தொடர்ந்த நபருக்கு நடத்துனர் பணி வழங்குமாறு உத்தரவிடப்பட்டு உள்ளது.
பள்ளிகளை திறந்தாலும் மாணவர்களை அனுப்ப தயாராக இல்லை – பெற்றோர்கள் கருத்து!!
மனுதாரர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பின்னர் தனது வயதினை சான்றிதழில் மாற்றம் செய்துள்ளார். மேலும் 13 ஆண்டுகளாக வழக்கும் தீர்வு காணப்படாமல் உள்ளது என தெரிவித்த நீதிபதி, சில தவறுகள் வாழ்க்கை பாதையையே மாற்றி விடுகிறது என வேதனை தெரிவித்தார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்