அரசுப்பள்ளிகளில் புதிய ஆசிரியர்கள் விரைவில் நியமனம் – விகிதாச்சார கணக்கெடுப்பு!!
தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் சேர்ந்துள்ள காரணத்தால், ஆசிரியர் – மாணவர் விகிதாச்சாரத்தை கணக்கெடுக்க்குமாறு பள்ளிக்கல்வித்துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் விரைவில் புதிய ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கிறது.
ஆசிரியர் – மாணவர் விகிதாச்சாரம்:
மத்திய கல்வித்துறை வெளியிட்டு உள்ள புள்ளி விபரங்களின் படி, தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை 30 மாணவருக்கு 1 ஆசிரியரும், நடுநிலைப் பள்ளிகளில் 35 மாணவர்களுக்கு 1 பட்டதாரி ஆசிரியரும், 9 ,10 ,11 & 12-ம் வகுப்புகளில் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். தற்போது நடப்பு கல்வியாண்டில் ஆசிரியர் – மாணவர் விகிதாச்சாரத்தை மாவட்ட வாரியாக கணக்கெடுக்குமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது.
இந்திய கணக்கு தணிக்கையாளர் (சிஏ) தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!!
காரணம், தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் கடந்த 10 ஆண்டுகளை விட, தற்போது இருமடங்கு அதிகமாக மாணவர்கள் சேர்ந்த்துள்ளனர். அதிலும் தொடக்க வகுப்புகளில் அதிகளவில் மாணவர்கள் சேர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கோவை அரசுப்பள்ளிகளில் மட்டும் நடப்பு கல்வியாண்டில் 4,486 மாணவர்கள் அதிகமாக சேர்ந்துள்ளனர். இதனால் புதிய பிரிவுகளை தொடங்கி, கூடுதல் ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டிய நிலை உள்ளது.
தமிழகத்தில் பள்ளிகள் திறந்தபின் சத்து மாத்திரைகள் வழங்க ஏற்பாடு – ஆலோசனை கூட்டத்தில் முடிவு!!
இதனால் மாவட்ட வாரியாக தொடக்கப்பள்ளி ஆசிரியர் – மாணவர் விகிதாச்சாரத்தை கணக்கெடுத்து கூடுதலாக தேவைப்படும் ஆசிரியர்களின் எண்ணிக்கை குறித்த விபரங்கள் அடங்கிய பட்டியலை சமர்ப்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தற்போது பணி நிரவலில் காத்திருக்கும் ஆசிரியர்களை தவிர்த்து கூடுதலாக தேவைப்படலாம் என கூறப்படுகிறது. இதனால் விரைவில் புதிய ஆசிரியர்கள் நியமனம் குறித்த அறிவிப்பு வெளியிடப்படலாம் என கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்