தமிழகத்தில் காய்கறி, மளிகை கடைகள் திறக்க அனுமதி? வணிகர் சங்கம் கோரிக்கை!!
தமிழகத்தில் நீட்டிக்கப்பட்டுள்ள தளர்வில்லா முழு ஊரடங்கு காலத்தில் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என வணிகர் சங்கத்தினர் முதல்வரிடம் கோரிக்கை வைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடைகள் திறப்பு
கடந்த மாத துவக்கம் முதல் உச்சம் அடைந்து வந்த கொரோனா பரவல் காரணமாக மே மாதம் 10 ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மே 24 வரை அறிவிக்கப்பட்ட 2 வார பொது முடக்க காலத்தில் மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் காய்கறி, மளிகை கடைகள் அனைத்தும் திறந்திருக்க அனுமதி கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் கொரோனா பரவலானது மீண்டுமாக தீவிரமடைந்து வந்தது.
TN Job “FB
Group” Join Now
அதனால் காய்கறி போன்ற அனைத்து அத்தியாவசிய கடைகளும் மூடும்படிக்கு உத்தரவிடப்பட்டு, ஜூன் 7 வரை தளர்வில்லா பொது முடக்கமாக அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து தமிழகத்தில் அடுத்தகட்ட ஊரடங்கு குறித்து முதல்வர் முக ஸ்டாலின், அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், மருத்துவ வல்லுநர்கள், அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த சூழலில் தமிழகத்தில் மீண்டுமாக கடைகளை திறக்க வேண்டும் என வர்த்தகர்கள் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, முதல்வரிடம் கோரிக்கை வைக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஜூன் 7க்கு பிறகு முழு ஊரடங்கு நீட்டிப்பு? முதல்வர் இன்று ஆலோசனை!
தமிழ்நாடு வர்த்தகர்கள் சங்க பேரமைப்பு தலைமையில் துப்புரவுப் பணியாளர்களுக்கு, மளிகை பொருட்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட வர்த்தகர்கள் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, ‘தமிழகத்தில் தளர்வில்லா பொது முடக்கம் காரணமாக வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் மீண்டுமாக கடைகளை திறக்க அனுமதி கொடுக்கப்பட வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை வைக்க உள்ளோம்.
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு பணி – அமைச்சர் விளக்கம்!
மேலும் மாவட்டங்கள் தோறும் வாகனங்களில் விற்பனை செய்பவர்கள், அதிக விலைக்கு காய்கறிகளை விற்பது தெரிந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என கூறினார். இது தவிர சென்னை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் கட்டுப்பாட்டில் செயல்படும் கடைகளில், வாடகை பாக்கி கொடுக்கவேண்டிய கடைகளுக்கு சீல் வைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் வியாபாரிகள் வாங்கியுள்ள கடனுக்கு, மாத தவணை கட்டுவதற்கு ஆறு மாத காலம் அவகாசம் தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.