சென்னை ரிப்பன் மாளிகையில் ‘தமிழ் வாழ்க’ பெயர் பலகை – அமைச்சர்கள் திறந்து வைப்பு!!
சென்னையில் உள்ள ரிப்பன் மாளிகை கட்டடத்தில் இன்று மீண்டும் தமிழ் வாழ்க, தமிழ் வளர்க என்னும் பெயர் பலகை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதனை தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, சுப்பிரமணியன் மற்றும் சேகர்பாபு அவர்கள் திறந்து வைத்தனர்.
ரிப்பன் மாளிகை:
தமிழகத்தில் தற்போது கொரோனா நோய்பரவல் காரணமாக தளர்வுகளற்ற பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் முதல்வர் ஸ்டாலின் அவர்களது தலைமையிலான தமிழக அரசு மக்களை பாதுகாக்கும் வகையில் மிக சிறப்பாக தங்களது பணிகளை செய்து வருகிறது. மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அவ்வப்போது மக்கள் பயனடையும் வகையில் பல அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்.
TN Job “FB Group” Join Now
நேற்று மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு முக்கிய 6 அறிக்கைகளை வெளியிட்டார். இது அனைவராலும் வரவேற்கப்பட்டது. தற்போது இதனை தொடர்ந்து தமிழக அரசு மேலும் வரவேற்கத்தக்க ஓர் செயலை அரங்கேற்றியுள்ளது. அதன்படி சென்னையில் உள்ள ரிப்பன் மாளிகையில் மீண்டும் தமிழ் வாழ்க, தமிழ் வளர்க என்னும் பெயர் பலகை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
தமிழகத்தில் காய்கறி, மளிகை கடைகள் திறக்க அனுமதி? வணிகர் சங்கம் கோரிக்கை!!
தமிழ் வாழ்க, தமிழ் வளர்க என்னும் பெயர் பலகையை தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் இந்து சமய மற்றும் அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் திறந்து வைத்தனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் பாராளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.