
நிலம் அல்லது வீட்டை பதிவு செய்ய போறீங்களா..? மாறவிருக்கும் புதிய விதிகள்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்..!!
இந்தியாவில் நிலம் அல்லது சொத்து வாங்கவோ, விற்கவோ பதிவு என்பது ஒரு முக்கியமான சட்டச் செயல்முறையாகும். இந்த செயல்முறையை எளிதானதாகவும் மற்றும் பாதுகாப்பாகவும் மாற்ற அரசாங்கம் 2025 தொடக்கத்தில் சில முக்கியமான மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதன்படி “வரி ரசீது, விற்பனை ஒப்பந்த ஆவணம், பதிவாளர் அலுவலகத்தில் பயோமெட்ரிக் வருகைப் பதிவு போன்ற சொத்து விவரங்களை சரிபார்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதியை நில மோசடிகளைத் தடுக்கவும், ஆன்லைன் பதிவுகளை பராமரிக்கவும் மத்திய அரசு உருவாக்கியுள்ளது. மேலும், ஏப்ரல் 30 முதல் இந்த விதிகள் அமலுக்கு வரும்” என தகவல் வெளியாகியுள்ளது.
TN MRB தமிழக மருத்துவத்துறை வேலை 2025 – ரூ.71,900/- சம்பளம் || இறுதி வாய்ப்பு!
இதனால் நாடு முழுவதும் “இனி நிலம் வாங்குபவர் மற்றும் விற்பவர் இருவரும் ஆதார் அடிப்படையிலான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களில் Blockchain அடிப்படையிலான டிஜிட்டல் நிலப் பதிவு முறை மேற்கொள்ள விற்பனை ஆவணங்கள் மற்றும் பிற ஆவணங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, பயோமெட்ரிக் சரிபார்ப்புக்காக துணைப் பதிவாளர் அலுவலகத்தில் இருதரப்பினரும் ஆஜராக வேண்டியது கட்டாயம் எனவும், டிஜிட்டல் முறை பயன்படுத்தி செய்யப்படும் பதிவுகள் அனைத்தும் 10 வேலை நாட்களுக்குள் முடிக்கப்படும்” எனவும் கூறப்பட்டுள்ளது.

























