பிப்ரவரி 15ம் தேதி முதல் பாஸ்டேக் கட்டாயம் – மத்திய அரசு திட்டவட்டம்!!
பாஸ்டேக் திட்டம் அறிமுகம்:
சுங்க சாவடிகளில் கட்டணங்களை நேரடியாக செலுத்துவதை தவிர்ப்பதற்கு மத்திய அரசு பாஸ்டேக் முறையை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் ஆரம்பத்தில் மக்களிடையே பலத்த எதிர்ப்பு இருந்தாலும் மத்திய அரசு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் மிகவும் விடாப்பிடியாக இருந்தது. சுங்க கட்டணம் செலுத்துவதில் வெளிப்படைத் தன்மை, சுங்க சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பதால் ஏற்படும் எரிபொருள் பயன்பாடு, நேர விரயம், சுற்றுச்சூழல் மாசுபாடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு தான் பாஸ்டேக் திட்டம் கொண்டு வரப்பட்டதாக மத்திய அரசு அறிவித்தது.
தமிழகத்தில் 7 புதிய அரசுப்பள்ளி கட்டடங்கள் – முதல்வர் திறந்து வைப்பு!!
காலக்கெடு:
பாஸ்டேக் பெறுவதற்கு கடந்த ஆண்டு இறுதியில் டிசம்பர் இறுதி வரை காலக்கெடு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. மக்களின் எதிர்ப்பு காரணமாக ஜனவரி மாதம் இறுதி வரை நீடிக்கப்பட்டு தற்போது மேலும் பிப்ரவரி 15ம் தேதி வரை கடைசியாக நீடிக்கப்பட்டது. பிப்ரவரி 15ம் தேதிக்கு பின்னர் நாடு முழுவதிலும் உள்ள சுங்க சாவடிகள் அனைத்திலும் வாகனங்களுக்கு பாஸ்டேக் மூலம் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட்ட உள்ளது. பிப்ரவரி 15ம் தேதிக்கு பின்னரும் பாஸ்டேக் பெறாதவர்கள் சுங்க கட்டணத்தை இரண்டு மடங்கு செலுத்த வேண்டியது இருக்கும்.
வருமான வரிக்கணக்கு தாக்கல் – பிப்ரவரி 15 வரை காலஅவகாசம்!!
புதிய வாகன சட்டம்:
புதிய மோட்டார் வாகன சட்டத்தை விரைவில் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். இந்த சட்டம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் புதிதாக வரும் வாகனங்கள் அனைத்துக்கும் பாஸ்டேக் கட்டாயமாகும் என்றும் இதன் மூலம் பாஸ்டேக் முறையை நடைமுறைபடுத்துவது எளிமையாக்கும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்