பெண்களுக்கான மத்திய அரசின் சூப்பர் சேமிப்பு திட்டம் – உடனே இணையுங்கள்!
குறுகிய காலத்திற்குள்ளாகவே நல்ல லாபத்தை ஈட்டும்படியாக பெண்களுக்கான சிறப்பான சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு தற்போது அறிமுகம் செய்திருக்கிறது.
சேமிப்பு திட்டம்:
இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த சேமிப்பு திட்டங்களை வங்கி கணக்குகள் மற்றும் தபால் அலுவலகங்கள் வழங்கி வருகின்றன. இந்த நிலையில் தற்போது மத்திய பட்ஜெத்தில் அறிவிக்கப்பட்ட மகிலா சம்மன் சேமிப்பு சான்றிதழ் திட்டம் குறித்தான முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், வங்கி மற்றும் தபால் அலுவலகங்களை காட்டிலும் இந்த திட்டத்தின் மூலமாக பெண்கள் நல்ல லாபத்தை ஈட்ட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
C-DAC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- மாதம் ரூ.35,500/- ஊதியம்!
இந்த திட்டத்தில் 18 வயது பூர்த்தி அடைந்த பெண்கள் இணைந்து பயன்பெறலாம் எனவும், 18 வயதிற்கு கீழ் உள்ள பெண் குழந்தைகளுக்கு பெற்றோர் அல்லது பாதுகாவலரின் பெயரில் கணக்குகளை துவங்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டம் வரும் 2025 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரைக்கும் நடைமுறையில் இருக்கும் எனவும், அந்த கால இடைவெளிக்குள் இந்த சேமிப்புத்திட்டத்தில் இணைந்துகொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திட்டத்தின் மூலமாக பெண்கள் குறைந்தது ரூ. 1000 முதல் அதிகபட்சமாக ரூ. 2 லட்சம் வரைக்கும் சேமித்துக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Follow our Twitter Page for More Latest News Updates
அடுத்ததாக இந்த திட்டத்தில் பெண்களுக்கு 7.5% வட்டியும், மூன்று மாதத்திற்கு ஒருமுறை வட்டி கணக்கிடப்பட்டு அதற்கான தொகை வங்கி கணக்கிற்கே நேரடியாக அனுப்பப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டத்தில் இணைய விரும்பும் பெண்கள் மற்றும் பெற்றோர்கள் தபால் அலுவலகம் அல்லது வங்கிகளுக்கு நேரடியாக சென்று இணைந்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.