மதுரை மாவட்ட விவசாயிகளுக்கான கடனுதவி – ஆட்சியர் அறிவிப்பு!
மதுரை மாவட்ட விவசாய உற்பத்தியாளர்கள், தொழில் முனைவோர்கள், தனியார் மற்றும் சிறுகுறு நடுத்தர நிறுவனங்களுக்கு வங்கிக் கடன் பெற்று தருவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
வங்கிக்கடன்:
மதுரை மாவட்டத்திலுள்ள விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள், தொழில் முனைவோர்கள், தனியார் மற்றும் சிறுகுறு நடுத்தர நிறுவனங்களுக்கு வங்கி கடன் வழங்கும் திட்டம் குறித்தான முக்கிய அறிவிப்பு ஒன்றை மாவட்ட ஆட்சித்தலைவர் தற்போது வெளியிட்டுள்ளார்.
அதாவது, இந்திய அரசின் கால்நடை பராமரிப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் அடிப்படையில் பால் படுத்தப்படுத்துதல் மற்றும் மதிப்புக்கூட்டுதல், இறைச்சி பதப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டுதல், கால்நடை தீவன உற்பத்தி ஆலைகள், இன மேம்பாட்டு தொழில்நுட்பம் மற்றும் இனப்பெருக்கப்பண்ணை, கால்நடை தடுப்பூசி மற்றும் மருந்து தயாரிக்கும் ஆலைகள், வேளான் கழிவு மேலாண்மை ஆலைகள் ஆகியவற்றை விரிவாக்கம் செய்வதற்கு வங்கி கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்திருக்கிறார்.
மேலும், இந்தத் திட்டத்தின் கீழ் வங்கி கடன் பெற விரும்பும் விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள், தொழில் முனைவோர்கள், தனியார் மற்றும் சிறுகுறு நடுத்தர நிறுவனங்கள் https://ahidf.udyamimitra.in என்கிற இணையதள பக்கத்திற்கு சென்று நேரடியாகவே விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்திய அரசின் கால்நடை பராமரிப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் அடிப்படையில் தகுதி அடிப்படையில் 90% வரைக்கும் வங்கி கடன் பெற்று தரப்படும் எனவும், சிறுகுறி நடுத்தர நிறுவனங்களுக்கு 10% முதல் 15 % வரை கடன் உதவி பெற்று தரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.