அம்மா உணவகங்கள் மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி? அரசிடம் ஆலோசனை!
தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் 1,545 அரசு தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல் கட்டமாக அரசு செயல்படுத்த உள்ளது.
காலை சிற்றுண்டி திட்டம்:
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்கள் பலர் காலை உணவை சாப்பிடாமல் வருகின்றனர். அதனால் அரசு, பள்ளிகளில் உள்ள 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டமானது முதற்கட்டமாக தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் 1,545 அரசு தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தொடங்கப்பட இருக்கிறது.
Exams Daily Mobile App Download
அதன்படி, முதல்கட்டமாக 1,545 பள்ளிகளில் படிக்கும் 1,14,095 மாணவ மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட இருக்கிறது. இந்த திட்டத்திற்கு அரசு ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. அது மட்டுமில்லாமல் சென்னை மாநகராட்சியில் 36 பள்ளிகளில் 5,941 மாணவ மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்க பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்காக ஆண்டுக்கு ரூ.1.66 கோடியை தமிழக அரசு ஒதுக்கி இருக்கிறது. இந்நிலையில் சென்னை தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான சிற்றுண்டியை அம்மா உணவகத்தில் இருந்து தயாரித்து வழங்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் 18 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு
சென்னை மாநகராட்சியில் 407 அம்மா உணவகங்கள் இருக்கும் நிலையில் அதன் மூலமாக ஆண்டுக்கு 120 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. அதனால் அதனை தவிர்க்க பல நடவடிக்கைகளை மாநகராட்சி எடுத்து வருகிறது. அந்த வகையில் உணவு தயாரிப்பதற்கான அனைத்து வசதிகளும் உள்ளதால், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு அம்மா உணவகத்தில் சிற்றுண்டி தயாரித்து பள்ளிக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசிடம் அனுமதி கேட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.