தமிழக நெல் கொள்முதல் நிலையங்களில் பயோமெட்ரிக் – இன்று முதல் நடைமுறை!
தமிழகத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் பயோமெட்ரிக் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று (ஜூன். 01) முதல் பயோமெட்ரிக் முறையில் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல் கொள்முதல்:
தமிழகத்தில் நடப்பு ஆண்டு 3ம் பருவ நெல் கொள்முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் பயோமெட்ரிக் முறை அமலுக்கு வந்துள்ளது. தமிழக விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு இந்த பயோ மெட்ரிக் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இனி விவசாயிகள் தங்களது நெல்லை விற்பனைக்காக ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் போது பயோமெட்ரிக் முறையில் விரல் கைரேகையை பதிவு செய்ய வேண்டும்.
SBI SCO வேலைவாய்ப்பு 2023 – சற்று முன் வெளியான அறிவிப்பு!
இதன் மூலம் வியாபாரிகள் நெல் கொள்முதலில் ஈடுபடுவதை தவிர்க்க முடியும். மேலும் எவ்வித காலதாமதமும் இன்று உடனடியாக சாகுபடி செய்த நெல்லை உரிய விலைக்கு கொள்முதல் செய்ய முடியும். அத்துடன் இந்த பயோமெட்ரிக் முறையில் விவசாயிகளின் விரல் கைரேகையை பதிவு செய்வதன் மூலம் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஓடிபி வரும். இதன் வாயிலாக விவசாயிகளின் விவரங்களை தெரிந்து கொள்ள முடியும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.