விதவை பெண்களுக்கு மாதம் ரூ. 1500 ஓய்வூதியம் – அரசின் சூப்பர் திட்டம்! முழு விவரம்!
இந்தியாவில் விதவை பெண்களுக்கு வித்வா பென்ஷன் யோஜனா திட்டம் மூலம் மாதம் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் குறித்த விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
மாதம் உதவித்தொகை:
நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்கு பல நலத்திட்டங்களை அமல்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் விதவை பெண்களின் வாழ்க்கைக்கு விதவை பென்ஷன் ( வித்வா பென்ஷன் யோஜனா) என்ற திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் கணவனை இழந்த பெண்களுக்கு அரசு மாதம் ஓய்வூதியம் வழங்கும். இந்த நிதியுதவி அவர்களின் வாழ்க்கைக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இந்த திட்டத்தில் 18 முதல் 65 வயது வரை உள்ள விதவைகள் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க விதவைகள் வறுமைக் கோட்டிற்குக் கீழே இருப்பதற்கான ஆதாரத்தை வழங்க தேவையான ஆவணங்களையும், வருமான சான்றிதழும் வைத்திருக்க வேண்டும். மேலும் அவர்களுக்கு குழந்தைகள் இருந்தால், அந்த குழந்தைக்கு 25 வயது வரை இந்த திட்டம் செல்லுபடியாகும்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
மேலும் விதவை பெண்ணுக்கு மகள் இருந்தால் அந்த பெண்ணுக்கு 65 ஆண்டுகள் வரை ஓய்வூதியம் வழங்கும். மேலும் முன்னதாக இந்த திட்டத்தில் ரூ. 1400 ஓய்வூதியம் வழங்கப்பட்ட நிலையில் தற்போது அது ரூ. 1500 ஆக உயர்த்தப்பட்டுள்ளதுஹ். அதனால் விதவை ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள பயனாளிகளின் கணக்கில் மூன்று மாதங்களுக்கு மொத்தம் ரூ.4500 அனுப்பப்படும். அதே போல விதவை ஓய்வூதியத் திட்டத்தில் 29 ஆயிரத்து 352 விதவை பெண்கள் தற்போது பயனடைந்து வருகின்றனர். இதில் விண்ணப்பிக்க சமூக நலத் துறைக்குச் செல்ல வேண்டும், அங்கு படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.