மணமேடையில் ராதிகா கழுத்தில் தாலி கட்டும் கோபி.. “பாக்கியலட்சுமி” சீரியல் புகைப்படம்! ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி ராதிகாவின் திருமண வைபோகம் கோலாகலமாக நடைபெற இருக்கிறது. மணமேடையில் கோபி ராதிகா கழுத்தில் தாலி கட்டுவது போல புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியா தனக்கு கொடுத்த முதல் சமையல் ஆர்டரை நல்லபடியாக செய்து முடிக்க வேண்டும் என பல ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார். ஈஸ்வரி ராமமூர்த்திக்கு கோபி ராதிகாவின் திருமணத்தை பற்றி தெரிய அவர்கள் எப்படியாவது கல்யாணம் நடக்க கூடாது என நினைக்கின்றனர். ஆனால் கோபி அவர்கள் பேச்சை கேட்காமல் என்ன நடந்தாலும் இந்த திருமணம் நடக்கும் என உறுதியாக சொல்கிறார். ராமமூர்த்தி நான் உயிரோடு இருக்கும் வரை இந்த திருமணத்தை நடத்த விடமாட்டேன் என சவால் விடுகிறார்.
மறுபக்கம் கோபி குடும்பத்தில் இருந்து அடிக்கடி பிரச்சனை செய்வதால் இந்த திருமணம் நடைபெறுமா என ராதிகா பதட்டத்தில் இருக்கின்றனர். ராதிகாவின் அம்மாவும் கோபி வீட்டில் இருப்பவர்கள் எப்படி எல்லாம் பிரச்சனை செய்வார்கள் என தெரிந்து பதட்டமாக இருக்கிறார். ஆனால் கோபி யார் என்ன சொன்னாலும் என்னுடைய முடிவை நான் மாற்றிக் கொள்ளமாட்டேன் என உறுதியாக சொல்கிறார். ஆனாலும் ராதிகாவின் அம்மாவும், ராதிகாவும் கோபி மீது சந்தேகமாக இருக்கின்றனர்.
Exams Daily Mobile App Download
யம்மாடி.. எட்டு வருடங்கள் கழித்து முடிவுக்கு வந்த பிரபல சன் டிவி சீரியல் – ரசிகர்கள் பிரியா விடை!
இந்நிலையில் கோபி ராதிகாவின் திருமண ஏற்பாடுகள் ஒரு பக்கம் நடைபெற, சந்துரு அதை எல்லாம் கவனித்து கொண்டு இருக்கிறார். இந்த திருமணம் நடைபெறுமா? ராமமூர்த்தியும் ஈஸ்வரியும் நடத்த விடுவார்களா? பாக்கியாவிற்கு கோபி திருமணத்தில் சமைப்பது தெரிந்தால் என்ன ஆகும்? என்பது எல்லாம் அடுத்து வரும் எபிசோடுகளில் காட்டப்பட இருக்கிறது. மேலும் ராதிகாவின் கழுத்தில் கோபி தாலி கட்டும் புகைப்படம் ஒன்றும் இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்