குடும்ப தலைவிகளுக்கு சர்பிரைஸ் – தீபாவளிக்கு முன்பே ரூ. 1000 உரிமைத்தொகை!
தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.1000 உரிமைத் தொகையை முன்கூட்டியே வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.
உரிமைத்தொகை:
தமிழகத்தில் ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் செயல்பாட்டில் இருந்து வருகிறது. இதன் வாயிலாக மாதந்தோறும் தகுதியுடைய குடும்ப தலைவிகளுக்கு வங்கி கணக்கில் மாதந்தோறும் 15ம் தேதி வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதுவரை 2 மாதங்கள் உரிமைத்தொகை உரியவர்களுக்கு வந்தடைந்துள்ளது. இந்த நிலையில் நடப்பு மாதம் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 மகளிர் கலைஞர் உரிமை தொகையை 15 ஆம் தேதிக்கு பதிலாக சற்று முன்கூட்டியே வழங்கப்பட அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.
ரூ.1,000 உரிமைத்தொகை திட்டத்தில் மேல் முறையீடு செய்துள்ளீர்களா ? – நவ.25 முதல் இத எதிர்ப்பாருங்க!
ஆனாலும் அரசிடமிருந்து இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இது குறித்து தமிழக முதல்வர் முடிவெடுத்து அறிவிப்பினை வெளியிடுவார் என அதிகாரிகள் கூறுகின்றனர். அதனை தொடர்ந்து உரிமை தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்துள்ள மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.