தமிழகம் முழுவதும் பிப்ரவரி 19ம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை – அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பிப்ரவரி 19ம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் நடைபெறாத பிற பகுதிகளில் வங்கிகள் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிகள் விடுமுறை:
தமிழகத்தில் கடந்த 2021 அக்டோபர் மாதம் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் சிறப்பிக்க நடைபெற்று முடிந்தது. அதன் தொடர்ச்சியாக நகர்ப்புறங்களுக்கு உள்ளாட்சி தேர்தலை ஜனவரி மாதத்திற்குள் நடத்தி முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் தேர்தலை நடத்துவதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. அதன்படி அனைத்து வார்டுகளிலும் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மேலும் கடந்த ஜனவரி 28ம் தேதி முதல் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் பணிகள் நடைபெற்றது.
மீண்டும் முழு ஊரடங்கு அமலாகுமா? அரசு பரபரப்பு விளக்கம்!
அதன் தொடர்ச்சியாக கடந்த வாரம் வேட்பாளர் பட்டியல் வெளியானது பிப்ரவரி 19ம் தேதி அன்று தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் தேதி வெளியிட்டுள்ளதை அடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. பள்ளிகள் வாக்குப்பதிவு மையங்களாக செயல்படவுள்ளதால் பள்ளிகளுக்கு பிப்ரவரி 19 முதல் 22ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. மேலும் தேர்தல் நடைபெறும் நாள், வாக்கு எண்ணப்படும் நாளன்று மது கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில் 3,803 காலிப்பணியிடங்கள் – வேலைவாய்ப்பு முகாம் மூலம் நிரப்ப நடவடிக்கை!
மேலும் பிப்.19ம் தேதி வாக்குரிமை உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே விடுப்பு எடுப்பவர்களுக்கு சம்பளம் பிடித்தமோ, குறைப்போ செய்யக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தேர்தல் நடைபெறும் பகுதிகளில் உள்ள வங்கி அலுவலகங்கள், கிளைகளுக்கு 19ம் தேதி விடுமுறை அளிக்கப்படுகிறது. மற்ற பகுதிகளில் உள்ள வங்கி அலுவலகங்கள் மற்றும் கிளைகள் வழக்கம் போல செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.