தமிழக ரேஷன் கடைகளில் 3,803 காலிப்பணியிடங்கள் – வேலைவாய்ப்பு முகாம் மூலம் நிரப்ப நடவடிக்கை!
தமிழக ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 3,803 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகவுள்ளது. இதனை வேலைவாய்ப்பு முகாம் மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் காலிப்பணியிடங்கள்:
தமிழகத்தில் அனைத்து அரசு துறைகளிலும் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது. மேலும் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான TNPSC போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பும் வெளியாகி உள்ளது. மற்ற துறைகளை தொடர்ந்து ரேஷன் கடைகளிலும் காலிப்பணியிடங்கள் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் மக்கள் வீட்டு உபயோக பொருட்களை மலிவு விலையில் பெற்று வருகின்றனர். அதனை தொடர்ந்து கடந்த மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் 21 வகையான மளிகை பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது.
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு – தொடக்கக்கல்வி இயக்ககம் அதிரடி உத்தரவு!
இந்த நேரத்தில் ரேஷன் கடைகளில் ஊழியர்கள் பற்றாக்குறையால் பொருட்களை விநியோகத்தில் கால தாமதம் ஏற்பட்டது. இதனால் பொருட்களை வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் காலிப்பணியிடங்களை நிரப்ப கோரிக்கை எழுந்து வருகிறது. ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 3,803 பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு முகாம் மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் சுமார் 23,502 முழுநேர நியாயவிலை கடைகளும் 9639 பகுதி நேர நியாய விலை கடைகள் என மொத்தம் 33,141 கடைகள் செயல்பட்டு வருகிறது.
பிப்.16 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு – இரவு ஊரடங்கு தொடரும்! மாநில அரசு அறிவிப்பு!
இந்த ரேஷன் கடைகளில் 3,176 விற்பனையாளர், 627 கட்டுநர் பணியிடங்களுக்கு மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் பணியிடத்தை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒரே பணியாளர் இரண்டுக்கு மேற்பட்ட முழு நேர நியாய விலை கடைகளை பொறுப்பேற்று செயல்படுத்தி வருவது குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநியோக திட்ட பணிகளை திறமையாக செயல்படுத்துவதற்கு இடையூறாக அமையும். எனவே முழு நேர நியாய விலை கடையின் விற்பனையாளர் கூடுதலாக ஒரே ஒரு முழுநேர நியாயவிலை கடையின் பொறுப்பினை மட்டும் வகித்து வருவதை இணை பதிவாளர்கள் உறுதிபடுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.