1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – ஜூன் 15 முதல் பள்ளிகள் திறப்பு! மாநில அரசு அறிவிப்பு!
நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு கோடைவிடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், சத்தீஸ்கர் மாவட்டத்தில் பள்ளிகள் ஜூன் 15 ஆம் தேதி முதல் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் 100 சதவிகிதம் கட்டாயம் பள்ளிக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு:
பல மாநிலங்களில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் செயல்படாமல் கடந்த 2 ஆண்டுகளாக பல பாதிப்புகள் ஏற்பட்டது. சென்ற ஆண்டு கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தன. மேலும் பல மாநிலங்களில் பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகி திட்டமிட்டபடி நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு தற்போது கோடைவிடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் ஜூன் 15 ஆம் தேதி முதல் 2022-23 ஆம் கல்வியாண்டு தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும் மாணவர்கள் 100 சதவிகிதம் பேர் கட்டாயம் வகுப்பிற்கு வருவதை உறுதி செய்வது குறித்து ஜூன் 15 ஆம் தேதி முதல் ஜூலை 15 ஆம் தேதி வரை ஆய்வு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் எனவும் அவ்வாறு வராத ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகள் திறந்த பின் ஒரு மாத கால ஆய்வுக்கு பின்னர் பள்ளி நிர்வாகம் மற்றும் பின் தொடர வேண்டிய திட்டங்கள் குறித்து அறிக்கை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
சுவாமி ஆத்மானந்த் உட்கிரிஷ்ட் ஆங்கிலம் மற்றும் இந்தி மீடியம், இலவச பாடப்புத்தகம், சீருடைகள், சைக்கிள்கள் மற்றும் மதிய உணவு, RTE சேர்க்கை, மஹ்தாரி துலர் யோஜனா உதவித்தொகை மற்றும் பள்ளி உள்கட்டமைப்பு போன்ற அரசின் திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளை அறிவுறுத்தி இருக்கிறது. பள்ளிகளில் உள்ள கழிவறைகளின் சுகாதாரம் மற்றும் பராமரிப்பு குறித்தும் ஆய்வு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.