சென்னை: அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்துள்ளது. நேற்றை விட இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மற்றும் பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனை பயன்படுத்தி நகைகள் வாங்க முற்பட்டு வருகின்றனர்.
தங்கம் விலை:
இந்தியாவில் தங்கம் விற்பனை என்பது எப்போது அதிகமாகவே இருக்கும். மக்கள் பெருமளவு தங்கத்தில் முதலீடு செய்வதை விரும்புகின்றனர். மற்ற மேலை நாடுகளில் அத்துடன் இந்திய கலாச்சாரப்படி தங்கதத்தால் ஆன அணிகலன்கள் அணிவது வழக்கமாக உள்ளது. குறிப்பாக பெண்கள் திருமணத்தை முன்னிட்டு தங்க நகைகள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவர். கடந்த வருடம் விதிக்கப்பட்ட ஊரடங்கால் தங்கத்தின் இறக்குமதியும் வெகுவாக குறைந்து இதுவும் தங்கத்தின் விலை உயர்வுக்கு பெரும் காரணமாக அமைந்தது. அதனை தொடர்ந்து நடைபெற்ற ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போரால் ஏற்பட்ட பங்கு சந்தை சரிவால் மேலும் தங்கம் விலை உயர்ந்தது.
Exams Daily Mobile App Download
இதனால் திருமணத்திற்கு நகைகள் வாங்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தவர்கள் தங்கத்தில் சேமிப்பு செய்ய நினைத்தவர்கள் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்தனர். எப்போதும் பண்டிகை மற்றும் சுப மூகூர்த்த தினங்களில் தான் தங்கத்தின் விலை அதிகரிக்கும். தற்போது சாதாரண நாட்களில் தங்கம் விலை அதிகரித்துள்ளது. தங்கத்தின் விலை பங்கு சந்தை நிலவரத்தை பொறுத்து நாள் ஒன்றுக்கு காலையிலும், மாலையிலும் விலை மாறுபடுகிறது. அந்த வகையில் இன்று காலை நிலவரப்படி ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 280 குறைந்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – ஜூலையில் 5% வரை அகவிலைப்படி உயர்வு!
இன்றைய நிலவரப்படி ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 280 குறைந்து ரூ. 38,200க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஒரு கிராம் தங்கம் ரூ.4,775க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.67.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த வாரத்தின் முடிவில் தங்கம் விலை குறைந்துள்ளது நகைப்பிரியர்களுக்கு ஆறுதலை அளித்துள்ளது. இன்று மக்கள் தங்க நகைகள் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.