தமிழகத்தில் நாளை (ஜூலை 13) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்சார வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை மின்சார தடை ஏற்படும் பகுதிகள் குறித்த விவரங்களை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது. அதன் படி சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி துணை மின் நிலையத்தில் நாளை (ஜூலை 13) மின்தடை ஏற்படும் பகுதிகளின் விவரங்கள் வெளியாகி இருக்கிறது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்:
தமிழகத்தில் பல மாவட்டங்களில் அடிக்கடி மின்சார பராமரிப்பு பணிகள் நடத்தப்பட்டு வருகிறது. அடிக்கடி கனமழை பெய்து வரும் காரணத்தால் மின்சார விபத்துகள் ஏற்படாமல் இருக்கவும் தடையில்லா மின்சாரம் வழங்கவும் மாதந்தோறும் மின்சார பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நாளை (ஜூலை 12) சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி துணை மின் நிலையத்தில் மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த விவரங்களை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அதன்படி மதகுபட்டி, ஒக்கூர், கீழமங்கலம், காடனேரி, அம்மன்பட்டி, நகரம்பட்டி, காளையார்மங்கலம், கருங்காப்பட்டி, தச்சம்பட்டி, கருங்காலக்குடி, அண்ணா நகர், பர்மா காலனி, நாலுகோட்டை, ராமலிங்கபுரம், வீழநேரி ஆகிய கிராமங்களிலும், அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும், மின் விநியோகம் நிறுத்தப்படும் என சிவகங்கை மின்பகிர்மான செயற்பொறியாளர் ஏ.கே முருகையன் தெரிவித்துள்ளார்.
காரைக்குடி:
அதே போல இன்று (ஜூலை 12) காரைக்குடி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் காரைக்குடி நகர் பகுதிகள், பேயன்பட்டி வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள், செக்காலைக்கோட்டை, பாரி நகர், கல்லூரி சாலை, செக்காலை சாலை, புதிய பேருந்து நிலையம், கல்லுக்கட்டி, பழைய பேருந்து நிலையம், கோவிலூர் சாலை, செஞ்சை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்விநியோகம் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நிறுத்தப்படும் என் காரைக்குடி மின் கோட்ட செயற்பொறியாளர் பி. ஜான்சன் தெரிவித்துள்ளார்.