தமிழகத்தின் 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் எதிரொலியாக தமிழகத்திலும் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று தமிழகத்தில் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மிதமான மழை பெய்ய வாய்ப்பு:
தென்மேற்கு பருவமழை ஜூன் 1-ஆம் தேதி அன்று தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு கடந்த மே 29-ம் தேதி அன்றே கேரளாவில் பருவமழை தொடங்கி விட்டது. நாட்டில் பருவ மழை ஏற்கனவே கணித்ததை விட கூடுதல் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போதைய தென் மேற்கு பருவ மழை காலத்தில் (ஜூன் முதல் செப்டம்பர் வரை) சராசரி மழை பொழிவு 106 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கடந்த மாதம் பருவ மழை பொழிவு 99 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது கூடுதல் பருவ மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Exams Daily Mobile App Download
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்யும் என தகவல்கள் கூறுகின்றன. இதை தொடர்ந்து தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்கிறது. கோடை காலமான ஜூன் மாதத்தில் மழை பெய்து பூமியை குளிர்வித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அதிக மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழையை காண முடிந்தது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 7ம் தேதி கோவை மாவட்டம் வால்பாறையில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, பள்ளி செல்லும் மாணவர்களின் பாதுகாப்பை கருதி வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.
தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – கூட்டுறவுத்துறை உத்தரவு!
மேலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தர்மபுரி, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று அடுத்த 3 மணி நேரத்துக்கு 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்த வகையில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.