தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – கூட்டுறவுத்துறை உத்தரவு!
ரேஷன் கடை ஊழியர்கள் அவ்வப்போது சம்பள உயர்வு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், அந்த கோரிக்கையை எழுத்துபூர்வமாக வைக்கும்படி கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
சம்பள உயர்வு:
தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் வாயிலாக பொதுமக்கள் அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை முதலான பல பொருட்களை மலிவு விலையில் வாங்கி பயனடைந்து வருகின்றனர். மேலும் ரேஷன் பொருட்களை மக்களுக்கு ஒரே மாதிரியாக விநியோகம் செய்வதில் ரேஷன் கடை ஊழியர்கள் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர். ஆனால், மற்ற அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது சம்பள உயர்வு வழங்குவது போல ரேஷன் கடை ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு வழங்குவதில்லை.
Exams Daily Mobile App Download
இந்நிலையில், அரசு நியாயவிலைக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் சம்பள உயர்வு வழங்க கோரி பல நாட்களாகவே கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஏற்கனவே, ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஜனவரி மாதத்தில் அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்படும் என அறிவிப்பு வெளியானது. ஆனால், ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்காமல் கூட்டுறவு துறை அமைப்பு நிறுத்தி வைத்தது. இதையடுத்து, ஊழியர்கள் அவ்வப்போது சம்பள உயர்வு வழங்கும்படி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
IDBI வங்கியில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க ஜூலை 12 கடைசி நாள் !
இந்நிலையில் நியாயவிலைக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவது தொடர்பான அறிவிப்பு ஒன்றை கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ளது. அதாவது, ரேஷன் கடை பணியாளர்கள் ஊதிய உயர்வு தொடர்பான கோரிக்கையை எழுத்துபூர்வமாக அளிக்க வேண்டும் என கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த ரேஷன் கடை பணியாளர்களின் விரிவான எழுத்துப்பூர்வமான கோரிக்கைகளை ஜூலை 14 ஆம் தேதிக்குள் கூட்டுறவுத்துறை குழுவினரிடம் சமர்பிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.