தமிழக போக்குவரத்து துறை அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழக போக்குவரத்து துறை :
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் திருச்சி மற்றும் விருதுநகரில் நகரப் பேருந்தின் நாற்காலி சாலையில் விழும் காட்சி மற்றும் பேருந்தில் ஏற்பட்ட சேதம் குறித்த காட்சிகள் வெளியானது. இந்த நிலையில் தமிழ்நாடு தலைமை செயலாளர் தலைமையில் இன்று போக்குவரத்து துறைக்கு ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
TNPSC தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டுமா? கணித பாடத்தில் ஈசியாக பாஸ் பண்ணும் முறை இதோ!
இதனை அடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பேருந்துகளையும் அடுத்த 48 மணி நேரத்துக்குள் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என போக்குவரத்து துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. குறைகள் இருப்பின் அதனை அடுத்த 48 மணி நேரத்துக்குள் சீரமைக்க வேண்டும் என்றும் போக்குவரத்து துறையானது உத்தரவு பிறப்பித்துள்ளது. மாநகரப் பேருந்து உள்ளிட்ட 20 ஆயிரம் பேருந்துகளை ஆய்வு செய்து உடனடியாக அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.