தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள்கள் – சரிபார்க்கும் பணிகள் ஆயத்தம்!!
தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு மத்தியில் வருகிற மே மாதம் 3ம் தேதி முதல் பிளஸ் 2 வகுப்பிற்கான பொதுத்தேர்வு தொடங்கவுள்ளது. இந்நிலையில் பொதுதேர்விற்கான விடைத்தாள்கள் சரிபார்க்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பிளஸ் 2 பொதுத்தேர்வு:
தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டது. 10ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று அதிகமான அளவில் கண்டறியப்பட்டு வருவதால் பள்ளிகள் (12ம் வகுப்பு தவிர்த்து) அனைத்தும் மூடப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மறுதேர்வு – அறிவிப்பு வெளியீடு!!
மேலும் தமிழகத்தில் 10 மற்றும் 11ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெறுவார்கள் என்று அரசால் அறிவிக்கப்பட்டது. ஆனால் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு காரணமாக அவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அவர்களுக்கு வருகிற 16ம் தேதி முதல் செய்முறை தேர்வுகள் தொடங்குகிறது.
TN Job “FB Group” Join Now
அதேபோல் அடுத்த மாதம் 3ம் தேதி முதல் அவர்களுக்கான பொதுத்தேர்வும் தொடங்குகிறது. இந்நிலையில் பிளஸ் 2 மாணவர்களின் பொதுதேர்விற்காக விடைத்தாள்கள் சரிபார்க்கும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு தேவைப்படும் அனைத்து பொருட்களும் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அரசுப்பணியாளர் குரூப் தேர்வுகள் ஒத்திவைப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
திருப்பூர் மாவட்டத்தில் நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலை பள்ளியில் அனைத்து பொருட்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அங்கு தற்போது விடைத்தாள்களை தைக்கும் பணியில் ஆசிரியர்கள் மிக தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். கூடுதல் விடைத்தாள், வரைபடம் ஆகியவற்றை சேர்த்து ஓர் புத்தகமாக தைக்க வேண்டும். தேர்வு மையங்களிலேயே இயந்திரம் மூலம் தைக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.