அரசுப்பணியாளர் குரூப் தேர்வுகள் ஒத்திவைப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
மஹாராஷ்டிரா மாநிலத்தில் நாளை (11-04-2021) நடக்கவிருந்த குரூப் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த அறிவிப்பு வெளிவரும் வரை தேர்வுகள் தள்ளி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுகள் ஒத்திவைப்பு:
நாடு முழுவதும் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் பல மாநிலங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையாக கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கொரோனாவால் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் மஹாராஷ்டிரா மாநிலம் தான் முதலிடத்தில் உள்ளது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக இரவுநேர ஊரடங்குடன் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
EPFO வட்டியில்லா கடன் – எளிய முறையில் பெறுவது எப்படி?
இந்நிலையில் ஏப்ரல் 11 ஆம் தேதி நடக்கவிருந்த அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வுகள் குறித்த அடுத்த அறிவிப்பு வெளிவரும் வரை இந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்