10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மறுதேர்வு – அறிவிப்பு வெளியீடு!!
கடந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்று காரணமாக சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் செய்முறை தேர்வில் பங்கேற்காத நிலை ஏற்பட்டது. தற்போது அவர்களுக்கு மறுதேர்வு நடத்த சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது.
சிபிஎஸ்இ தேர்வு:
கடந்த ஆண்டு முதல் நாடு முழுவதும் கொரோனா நோய் பரவல் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கடந்த கல்வியாண்டில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் மற்றும் தேர்வுகள் நடைபெற்றது. சிபிஎஸ்இ வழியில் பயிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரலையில் பொதுத்தேர்வுகள் நடைபெற்றது. தற்போது தமிழகத்தில் மீண்டும் கொரோனா நோய் பரவல் வேகமெடுத்து வருகிறது. இதன் காரணமாக தமிழக அரசின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 9 முதல் 11ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
ஆனால் சிபிஎஸ்இ வழியில் பயிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற மே மாதம் 4ம் தேதி முதல் பொதுத்தேர்வு நடைபெறும். மேலும் அதற்கான தேர்வு அட்டவணையும் ஏற்கனவே வெளியாகியது. இந்நிலையில் கடந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்று காரணமாக சிபிஎஸ்இ வழியில் பயிலும் சில மாணவர்கள் செய்முறை தேர்வுகளில் பங்கேற்காத நிலை ஏற்பட்டது. சில மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க ஒரே வழி – சுகாதாரத்துறை செயலர் பேட்டி!!
மேலும் சில மாணவர்கள் தங்களது குடும்பத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக தேர்வில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் அவர்களுக்கான மறுதேர்வு நடத்துவது குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டு வந்த நிலையில் அவர்களுக்கு கட்டாயமாக மறுதேர்வு நடத்த வேண்டும் என்று சிபிஎஸ்இ உத்தரவிட்டது. மேலும் நடப்பு கல்வியாண்டில் கொரோனா நோய்த்தொற்றினால் தேர்வு எழுத தவறும் மாணவர்களுக்கு வருகிற ஜூன் மாதம் 11ம் தேதிக்குள் தேர்வை நடத்தி முடிக்க சிபிஎஸ்இ உத்தரவிடப்பட்டுள்ளது.