தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க ஒரே வழி – சுகாதாரத்துறை செயலர் பேட்டி!!

0
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க ஒரே வழி - சுகாதாரத்துறை செயலர் பேட்டி!!
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க ஒரே வழி - சுகாதாரத்துறை செயலர் பேட்டி!!
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க ஒரே வழி – சுகாதாரத்துறை செயலர் பேட்டி!!

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் ஏற்படும் கொரோனா தொற்று எண்ணிக்கையில் 3 சதவிகிதம் தமிழகத்தில் ஏற்படுகிறது என்று சுகாதாரத்துறை செயலர் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு:

தமிழகத்தில் கொரானாவின் அலை கடந்த ஆண்டை விட மிக தீவிரமாக தற்போது இருந்து வருகிறது. இதன் காரணமாக பல கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு காரணமாக தற்போது மீண்டும் விக்ட்டோரியா கோவிட் கேர் மையத்தை திறக்கவுள்ளனர்.  இது குறித்து சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார்.

தமிழகத்தில் 10ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தேர்வு அறிவிப்பு எப்போது ?

அதன்படி அவர் கூறியதாவது, இந்த விக்ட்டோரியா கோவிட் கேர் மையத்தில் லேசான அறிகுறி மற்றும் அறிகுறி இல்லாத நோயாளிகளுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்படும். தற்போது வரை தமிழகத்தில் 11 பேருக்கு பிரிட்டன் கொரோனா மற்றும் ஒருவருக்கு தென் ஆப்ரிக்க கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து மக்கள் முழுவதுமாக மீளவேண்டும் என்றால் அனைவரும் கட்டாய முறையில் மாஸ்க் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

மக்களின் ஒத்துழைப்பு மிக கண்டிப்பாக இருக்க வேண்டும். இல்லையெனில் தமிழகத்தில் மிக கடுமையான நடவடிக்கை எடுக்கும் நிலை ஏற்படும். தற்போது இந்தியாவில் ஏற்படும் கொரோனா பாதிப்பில் 3 சதவிகிதம் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு மக்கள் அனைவரும் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும். தற்போது தமிழகத்தில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை இல்லை.

இந்தியாவில் மேலும் 1,45,384 பேருக்கு கொரோனா – 794 பேர் உயிரிழப்பு!!

தமிழகத்தில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அதிகமான அளவில் தடுப்பூசி செலுத்தப்பட்டது.  ஆனால் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி மீது ஆர்வம் காட்ட தவறி வருகின்றனர். மேலும் தடுப்பூசி செலுத்திக்கொண்ட சிலருக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்படுகிறது. ஆனால் அது தீவிரமில்லாமல் இருக்கிறது. இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி சுமார் 80 சதவிகிதம் வரை அதிகரிக்கும் என்று தெரிவித்தார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!