அண்ணா பல்கலை எம்.டெக் மாணவர் சேர்க்கையை தொடங்கலாம் – உயர்நீதிமன்றம் உத்தரவு!!
அண்ணா பல்கலைக்கழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட எம்.டெக்., 2 பாடப்பிரிவில் மாணவர் சேர்க்கையை தொடங்கலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. மேலும் மத்திய அரசின் இடஒதுக்கீட்டை பின்பற்றலாம் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்.டெக் மாணவர் சேர்க்கை:
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.டெக் பயோடெக்னாலஜி மற்றும் கம்ப்யூடேஷனல் டெக்னாலஜி ஆகிய இரண்டு பாடப்பிரிவுகளுக்கு நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மத்திய அரசின் 49.5% இடஒதுக்கீட்டை பின்பற்ற அண்ணா பல்கலை திட்டமிட்டு இருந்த நிலையில், தமிழக அரசின் 69% இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற வலியுறுத்தியதால் மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டது.
தமிழக கூட்டுறவு சங்க தற்காலிக ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் – உயர்நீதிமன்றம் உத்தரவு!!
இது தொடர்பாக ஏஐசிடிஇ தாக்கல் செய்திருந்த பதில் மனுவில், டிசம்பர் மாதமே மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடு முடிந்து விட்டதால் இனி நடத்த முடியாது என தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கின் இறுதி விசாரணை இன்று நடைபெற்றது. அதில் எம்.டெக் பாடப்பிரிவில் நிறுத்தி வைக்கப்பட்ட மாணவர் சேர்க்கையை மீண்டும் தொடங்க உயர்நீதிமன்றம் அண்ணா பல்கலைக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் நடப்பு கல்வியாண்டில் மத்திய அரசின் 49.5% இடஒதுக்கீட்டை பின்பற்றியே மாணவர் சேர்க்கையை நடத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த முறையை ஏற்கனவே தமிழக அரசு ஏற்று ஒப்பந்தம் மேற்கொண்டு உள்ளதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டு உள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்