தமிழக கூட்டுறவு சங்க தற்காலிக ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் – உயர்நீதிமன்றம் உத்தரவு!!
தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கூட்டுறவு சங்கம் பணியாளர்கள்:
தமிழக கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வாதாட கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.எச் அரவிந்த் பாண்டியன் கலந்து கொண்டார்.
TN Job “FB Group” Join Now
கூட்டுறவு சங்கம் சார்பில் அரசு வழக்கறிஞர்கள் பால ரமேஷ், எல்.பி சண்முக சுந்தரம் மற்றும் மனுதாரர்கள் தலைமையில் வழக்கறிஞர் சி.பிரகாசம் ஆகியோர் கலந்து கொண்டனர். அனைத்து தரப்பினர் அளித்த வாதங்களை கேட்ட நீதிபதிகள் தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளில் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் தற்காலிக பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கூடுதல் நேரம் பாடம் நடத்த வேண்டும் – அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி!!
மேலும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடராத தமிழகத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் இது பொருந்தும் எனக்கூறி உத்தரவிட்டார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்