தேர்வு வினாத்தாள் கசிந்தால் அதிரடி நடவடிக்கை – பல்கலைக்கழகம் எச்சரிக்கை!

0
தேர்வு வினாத்தாள் கசிந்தால் அதிரடி நடவடிக்கை - பல்கலைக்கழகம் எச்சரிக்கை!
தேர்வு வினாத்தாள் கசிந்தால் அதிரடி நடவடிக்கை - பல்கலைக்கழகம் எச்சரிக்கை!
தேர்வு வினாத்தாள் கசிந்தால் அதிரடி நடவடிக்கை – பல்கலைக்கழகம் எச்சரிக்கை!

மும்பை பல்கலைக்கழகம் பிவாண்டியில் உள்ள கல்லூரியில் வினாத் தாள் கசிந்ததையொட்டி அந்த கல்லூரியில் தேர்வு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

வினாத்தாள் கசிவு

மும்பை பல்கலைக்கழகத்தில் கீழ் உள்ள கல்லூரி ஒன்றில் பல்கலைக்கழக அளவிலான தேர்வுகள் நடத்தப்பட்டது. அதில் அந்த தேர்வுக்கான வினாத்தாள் கசிந்ததாக உதவி கணினி ஆபரேட்டர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அது குறித்த விசாரணையில் இரண்டு மாணவர்கள் தங்களுடைய செல்போனில் வினாத்தாள் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இது குறித்து பல்கலைக்கழகத்தின் நியாயமற்ற வழிமுறைகள் குழு, நவம்பர் 18 அன்று நடத்திய கூட்டத்தில், குற்றம் உறுதியானால் அந்த கல்லூரியில் தேர்வுகளை நடத்துவதைத் தடுக்க பரிந்துரைத்தது.

TNPSC தேர்வு ஒத்திவைப்பு? – தேர்வர்கள் குழப்பம்!!

அதனை தொடர்ந்து அக்டோபர் மாதம் வினாத்தாள் கசிவு குறித்து விசாரணை செய்யப்பட்டது. அதில் அக்டோபர் 31 ஆம் தேதி, கோட்டை சித்தார்த் கல்லூரியில் தேர்வு எழுதிய மாணவர் ஒருவர் தனது போனில் நகல் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தேர்வு காலை 10.30 மணிக்குத் தொடங்க இருந்த நிலையில், 9.37 மணிக்குப் புறநிலை வினாக்களுக்கான விடைகள் அடங்கிய வினாத்தாள் அவரது வாட்ஸ்அப்பில் இருந்ததை மேற்பார்வையாளர் கண்டுபிடித்தார். இந்நிலையில் வினாத்தாள் கசிந்தால் அந்த கல்லூரியில் தேர்வு நடத்த அனுமதி இல்லை என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!