இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு வங்கிகள் மூடப்படும்.. ரிசர்வ் வங்கி அறிவித்த முக்கிய தகவல்..!!
ரிசர்வ் வங்கியின் விதிப்படி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வங்கிகளும் மூடப்படும். மேலும், சில மாநிலங்களில் கொண்டாடப்படும் பண்டிகைகள் காரணமாக வங்கிகளுக்கு கூடுதல் விடுமுறை வழங்கப்படும். இந்த விதிமுறை பெரும்பாலான மக்களுக்கு தெரிவதில்லை. எனவே விடுமுறை நாட்களில் மக்கள் வங்கிக்குச் சென்று, மூடப்பட்டிருப்பதை கண்டவுடன் ஏமாற்றம் அடைகின்றனர்.இதுபோன்ற சிரமத்தை தவிர்க்க, உங்கள் பகுதியில் வரவிருக்கும் வங்கி விடுமுறை நாட்கள் குறித்து எச்சரிக்கையாக இருப்பது முக்கியம்.
தொடர்ந்து உச்சம் கண்ட தங்கம் விலையில் திடீர் சரிவு.. இன்றைய விலை எவ்வளவு தெரியுமா..??
இந்நிலையில் இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ விடுமுறை நாட்காட்டியின்படி, ஏப்ரல் 26 முதல் 30 ஆம் தேதி வரை பல்வேறு பிராந்திய மற்றும் தேசிய அனுசரிப்புகளுக்காக வங்கிகள் மூடப்படுகிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, “ஏப்ரல் 26 – நான்காவது சனிக்கிழமை, ஏப்ரல் 27 – ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 29 – பரசுராமர் ஜெயந்தி மற்றும் ஏப்ரல் 30 – பசவ ஜெயந்தி காரணமாக வங்கிகள் மூடப்படுகின்றன”. மேலும், “ஏப்ரல் 28 திங்கள் அன்று வழக்கம் போல் இயங்கும் என்றும், இந்த விடுமுறைகள் பிராந்திய விழாக்களைப் பொறுத்து மாறுபடும்” என கூறப்பட்டுள்ளது. எனவே வங்கிக்கு செல்லும் முன்பு வாடிக்கையாளர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் சரிபார்க்கும் படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.


























