ஆதாருடன் பான் எண்ணை இணைக்கவில்லையா? மத்திய அரசின் அதிரடி நடவடிக்கை!!
ஆதாருடன் பான் எண்ணை இணைக்காதவர்களுக்கு வருமான வரித்துறை சார்பில் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஆதார் பான் இணைப்பு:
ஆதார் கார்டையும், பான் கார்டையும் இணைக்க வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தியும் பெரும்பாலானோர் அலட்சியம் காட்டி வருகின்றனர். மத்திய அரசும் தொடர்ந்து கூடுதல் கால அவகாசத்தை வழங்கி வருகிறது. இந்நிலையில், மத்திய அரசு புதிதாக சொத்து வாங்குபவர்களுக்கு புதிய விதியினை அமல்படுத்தியுள்ளது.
Follow our Twitter Page for More Latest News Updates
அதாவது, ஆதார் கார்டுடன் பான் கார்டினை இணைக்காமல் வைத்திருந்தால் 1% டிடிஎஸ் க்கு பதிலாக 20% செலுத்த வேண்டும் என சொத்து உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வருமான வரிச் சட்டத்தின்படி, ஐடிஆர் தாக்கல் செய்யும்போது பான் கார்டுடன் ஆதாரை இணைப்பது அவசியமாகும்.
TNPSCக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு – இனி இது கட்டாயம்!
இவ்வாறு, பான் கார்டுடன் ஆதாரை இணைப்பதற்கு 31 மார்ச் 2022 வரை அவகாசம் கொடுக்கப்பட்டது. அதன் பின்னரும் ரூ. 1000 செலுத்தி பான் மற்றும் ஆதாரை இணைக்க வாய்ப்பு கொடுக்கபட்டது. ஆனாலும், பொதுமக்கள் அலட்சியம் காட்டியதால் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.