TNPSCக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு – இனி இது கட்டாயம்!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது சான்றுகளை ஆய்வு செய்து குறித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக அரசுத் துறை பணியிடங்களுக்கு போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது சான்றுகளை முறையாக ஆய்வு செய்யவில்லை என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் தகுதி இல்லாதவர்கள் போலி சான்றிதழ் சமர்ப்பித்து பணியில் சேருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
TNPSC தேர்வில் பாஸ் ஆக என்ன படிக்க வேண்டும்? எப்படி தயாராக வேண்டும்? – உடனே பாருங்க!
இந்த வழக்கு விசாரணையில் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போதே சான்றுகளை முறையாக ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது . மேலும் இந்த உத்தரவில் போலி சான்று கொடுத்து அரசு பணியில் சேரும் நபர்களை கண்டறிந்து உடனே கிரிமினல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.