ஏழை மக்களுக்கு ரேஷன் கார்டு விநியோகம் – மாநில அமைச்சர் உறுதி!
ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அம்மாநில நிதித்துறை அமைச்சர் அனைத்து ஏழைகளுக்கும் ரேஷன் கார்டு வழங்கப்படும் என அறிவித்தார்.
ரேஷன் கார்டு:
இந்தியாவில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு மாநிலம் முழுவதும் அரசால் ரேஷன் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்த கார்டு மூலமாக மக்கள் மாதந்தோறும் மலிவு விலையில் உணவு பொருட்களை பெற்று பயனடைந்து வருகின்றனர். தற்போது அரசின் பெரும்பாலான நலத்திட்ட உதவிகளும் ரேஷன் கார்டை அடிப்படையாகக் கொண்டு ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இன்றைய சூழலில் மக்கள் தற்போது ரேஷன் கார்டை பெறுவதில் அதிக ஆர்வம் காண்பித்து வருகின்றனர்.
ஓய்ந்தது மிக்ஜாம் புயல் – இன்னும் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு – சென்னையின் இன்றைய நிலவரம்!
இந்த நிலையில் மக்கள் ஆன்லைன் வாயிலாகும் ரேஷன் கார்டை பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது அந்தந்த மாநில அரசின் உணவு வழங்கத் துறை இணையதளம் வாயிலாக மக்கள் வீட்டில் இருந்தபடியே புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தின் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அம்மாநில நிதித்துறை அமைச்சர், மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு ஏழை மக்களுக்கும் ரேஷன் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.