பள்ளிகளில் சானிட்டரி பேட் விநியோகம் திட்டம் – ஜனவரி முதல் தொடக்கம்!
கர்நாடகா அரசு ஷூச்சி திட்டத்தின் கீழ் பள்ளிகளில் ஜனவரி மாதம் முதல் சானிட்டரி பேட் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு அறிவிப்பு
கர்நாடகா மாநிலத்தில் பெலகாவியில் உள்ள சட்டப் பேரவையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் பள்ளிகளில் சானிட்டரி பேட் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதாவது 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பள்ளிகளில் மாதவிடாய் சுகாதாரத்துக்கான ஷூச்சி திட்டத்தை மீண்டும் தொடங்க மாநில அரசு முடிவு செய்து இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஏழை மக்களுக்கு ரேஷன் கார்டு விநியோகம் – மாநில அமைச்சர் உறுதி!
மேலும் பேசிய அவர் பல காரணங்களால் இந்த திட்டம் கடந்த மூன்று ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் செயல்படுத்த அரசுக்கு ரூ. 40 கோடி தேவை என தெரிவித்தார். இதற்கு முன் பள்ளிகளில் மாவட்ட சுகாதார அலுவலர்கள் மூலம் நாப்கின்கள் விநியோகிக்கப்பட்டன, இப்போது டெண்டர் எடுக்கும் ஏஜென்சிகள் அவற்றை நேரடியாக பள்ளிகளுக்கு வழங்குவார்கள் என தெரிவித்துள்ளார்.