காண்ட்ராக்ட்டை முடித்தாரா பாக்கியா? ஈஸ்வரி செய்யும் துரோகம் – “பாக்கியலட்சுமி” சீரியல் அப்டேட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி ஈஸ்வரி பாக்கியாவை அவமானப்படுத்திக் கொண்டே இருக்க, ராதிகா அவருக்கு துணையாக இருக்கிறார்.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில், கோபி பாக்கியா வீட்டில் இருந்து கொண்டு அவரை மட்டம்தட்டிக் கொண்டே இருக்கிறார். மேலும் பழனிச்சாமி உடன் சேர்த்து வைத்து பேசுவதும், காண்ட்ராக்ட் கிடைக்க கூடாது என பேசுவதும் என அவர் பாக்கியாவை சீண்டிக் கொண்டே இருக்கிறார். பாக்கியா வீட்டில் அனைவரும் இருந்தாலும் யாரும் ஈஸ்வரி கோபி பேசுவதை தட்டி கேட்கவே இல்லை.
பள்ளிகளில் சானிட்டரி பேட் விநியோகம் திட்டம் – ஜனவரி முதல் தொடக்கம்!
அவர்களை தட்டி கேட்பது ராதிகா ஒரு ஆள் தான். இந்நிலையில் மழையால் காண்ட்ராக்ட் நடக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்க, பாக்கியா நல்லபடியாக காண்ட்ராக்ட்டை செய்து முடித்து பணம் வாங்குகிறார். அவருக்கு துணையாக ராதிகா தான் அருகில் இருக்கிறார். பாக்கியா கஷ்டப்பட்டு காண்ட்ராக்ட்டை முடிக்க, அவருடைய கஷ்டத்தில் ராதிகா பங்கு இருக்கிறது. பாக்கியா கஷ்டப்பட்டு பணம் சம்பாரிக்க, ஈஸ்வரி அதை கோபியிடம் கொடுக்க என்ன நடக்கும் என்பது எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.