மாணவர்கள் பள்ளிக்கு செல்வதில் சிக்கல் – அரசின் முக்கிய முடிவு.. அமைச்சர் தகவல்!
காலை நேரங்களில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் பள்ளியின் நேரத்தை மாற்றியமைக்க ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக மாநில அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பள்ளி நேரம் மாற்றம்:
தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திலும் கோடை விடுமுறை தள்ளி வைக்கப்பட்டு ஜூன் 12-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. இதன் பின்னர் தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் நீர் தேங்கி அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதனால், போக்குவரத்து நெரிசலில் சிக்கி மாணவர்கள் சரியான நேரத்திற்கு பள்ளிக்கு செல்ல இயலவில்லை என ஆசிரியர்கள் தரப்பில் கோரிக்கை அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், ஒரேநேரத்தில் கல்லூரி வாகனங்கள், பள்ளிவாகனங்கள் செல்வதால் காலையில் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
சிலிண்டரை ஆன்லைன் மூலமாக புக் செய்கிறீர்களா? – உங்களுக்கான சலுகைகள்!
இதனால், போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக பள்ளி நேரத்தை மாற்றியமைக்க ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக புதுச்சேரி மாநில அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். மேலும், பள்ளி வாகனங்களில் அதிக அளவிலான மாணவர்களை ஏற்றி செல்வதாகவும் எழுந்த புகாரின் அடிப்படையில் பள்ளி வாகனங்களில் சரியான அளவில் மட்டுமே மாணவர்களை ஏற்றி செல்ல வேண்டும் எனவும், அதிக அளவில் ஏற்றி செல்லும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாகவும் மாநில அமைச்சர் அறிவித்துள்ளார்..