தமிழக போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு? ஜூலை 11ம் தேதி பேச்சுவார்த்தை!
தமிழக அரசின் போக்குவரத்து துறையில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பான பேச்சுவார்த்தை ஜூலை 11ம் தேதியன்று நடைபெற இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
ஊதிய உயர்வு
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகை குறித்த பல்வேறு கோரிக்கைகளை அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர். பொதுவாக, தமிழக போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும் ஓட்டுனர்கள், நடத்துனர்கள் ஆகியோருக்கு ஊதியம் வழங்குவது தொடர்பாக 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒப்பந்தம் போடப்படுவது வழக்கம். ஆனால் தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக நிலவிக் கொண்டிருக்கும் கொரோனா பரவல் சூழ்நிலைகளுக்கு மத்தியில் போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு ஊதிய ஒப்பந்தம் போடப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
Exams Daily Mobile App Download
இருப்பினும், கடந்த ஆட்சிக் காலத்தில் இந்த துறையை சேர்ந்த ஊழியர்களுக்கு ரூ.1000 நிவாரணமாக வழங்கப்பட்டது. இதற்கிடையில் தமிழகத்தில் தற்போது ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ளதால், போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 14வது ஒப்பந்தம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் ஊதிய உயர்வு, அலவன்ஸ் மற்றும் ஓய்வூதிய நிலுவைத் தொகை அளிக்கப்பட வேண்டும் என்றும் அரசுக்கு வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த கோரிக்கைகள் தொடர்பாக போக்குவரத்து துறையின் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் பல கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி இருந்தார்.
காவல் துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு – முழு விவரங்களுடன் !
ஆனால், இது குறித்த இறுதி முடிவு கிடைக்காததால் போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகள் வலுத்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு 14வது ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்துவதற்கான பேச்சுவார்த்தை அடுத்த வாரத்தில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் வரும் ஜூலை 11ம் தேதியன்று அமைச்சர் சிவசங்கர் தலைமையில் குரோம்பேட்டை பணிமனை வளாகத்தில் வைத்து இந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.