தமிழகத்தில் 90ML பேக்கில் மதுபானம் விற்பனை – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் 90ML பேக்கில் மதுபானங்களை விற்பனை செய்வது குறித்து பேச்சுவார்த்தை செய்யப்பட்டு வருவதாகவும், கூடிய விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.
மதுபான விற்பனை:
தமிழகத்தில் மொத்தமாக 5289 டாஸ்மாக் கடைகள் இயங்கி வரும் நிலையில் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களின் மூலமாக ஒரு நாளைக்கு மட்டுமே கோடிக்கணக்கில் அரசுக்கு வருமானம் வந்தபடி இருக்கிறது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை நவீன முறையில் மாற்றம் செய்வதற்கான நடவடிக்கையையும் தமிழக அரசு தற்போது மேற்கொண்டு வருகிறது. அதாவது, ஒவ்வொரு மாவட்டத்திலும் 5 மதுபான கடைகள் வீதம் தமிழகம் முழுவதும் 200 மதுபான கடைகள் நவீனமயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஈரானில் கொளுத்தும் வெப்பம் – 2 நாட்களுக்கு பொது விடுமுறை.. முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்!
இதனைத் தொடர்ந்து மதுபான கடைகளில் 90ML பேக்கிலும் மதுபானங்களை விற்பனை செய்வது குறித்துப் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், மதுக்கடைகளின் நேரத்தை மாற்றி அமைப்பது குறித்த அறிவிப்பும் கூடிய விரைவில் வெளியிடப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். மேலும், மதுபான கடைகளில் அரசு நிர்ணயத்த விலையை காட்டிலும் கூடுதல் விலைக்கு மது பாட்டில்களை விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அறிவித்துள்ளார்.