தமிழகத்தில் முதன்முறையாக.. மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் ஆங்கில மொழி மேம்பாடுத் திட்டம்!
தமிழகத்தில் முதன்முறையாக தஞ்சாவூரில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் கற்றல் குறைபாடுகள் சிறப்புப் பயிற்சி மற்றும் ஆங்கில மொழி மேம்பாடுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
புதிய வசதி:
தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கூட்டுறவு காலனியில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் மைக்கோசாப்ட் மற்றும் பிளிங்க் அறக்கட்டளை சார்பில் கற்றல் குறைபாடுகள் சிறப்புப் பயிற்சி மற்றும் ஆங்கில மொழி மேம்பாடுத் திட்டம் தொடங்கப்பட்டு இருக்கின்றன. இது தமிழகத்திலேயே முதன்முறை ஆகும். இந்த நிகழ்ச்சிக்கு அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் க. கார்த்திகேயன் தலைமை வகித்தார்.
தமிழகத்தில் 90ML பேக்கில் மதுபானம் விற்பனை – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
மேலும் தனியார் திட்ட ஒருங்கிணைப்பாளர் டி.ஸ்ரீநாத், மேயர் சண்.ராமநாதன் மற்றும் துணை மேயர் அஞ்சுகம்பூபதி ஆகியோர் கலந்துகொண்டனர். இது குறித்து தனியார் நிறுவன திட்ட மேலாளர் எல். மகாலக்ஷ்மி கூறுகையில், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் முதன் முறையாக தஞ்சாவூர் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் விரைவில் பள்ளியக்கிரஹாரம், புதுப்பட்டிணம், நீலகிரி ஆகிய பகுதிகளிலுள்ள தொடக்கப் பள்ளிகளில் தொடங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.