தமிழகத்தில் 500 மதுபானக்கடைகள் மூடல் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் உள்ள மொத்த மதுபான கடைகளில் 500 மதுபான கடைகள் மட்டும் மூடப்பட்ட இருப்பதாகவும், ஜூன் மூன்றாம் தேதி அது குறித்தான அறிவிப்பு வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுபானக்கடை:
தமிழகத்தில் மட்டுமே மொத்தமாக 5289 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. மேலும், டாஸ்மாக் கடைகள் மூலமாகத்தான் தமிழக அரசுக்கு பெருமளவில் லாபம் கிடைத்து வருகிறது. இதனால், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் மதுபான கடைகளை குறைக்க வேண்டும் என கோரிக்கை வைத்த போது கூட தமிழக அரசின் சார்பில் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இந்நிலையில், தற்போது தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
ஜூலை 1 முதல் பொது மக்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடையாது – வெளியான முக்கிய எச்சரிக்கை!
அதாவது, முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் மூன்றாம் தேதி தமிழகத்தில் உள்ள 500 மதுபான கடைகள் மூடுவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் ஆய்வு செய்யப்பட்டு எந்தெந்த கடைகளை மூட வேண்டும் என்பதற்கான பணி முடிவடைந்து விட்டதாகவும் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அடுத்ததாக, 500 மதுக்கடைகள் மூடுவது குறித்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.