ஜூலை 1 முதல் பொது மக்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடையாது – வெளியான முக்கிய எச்சரிக்கை!
ரேஷன் கார்டுடன் ஆதாரை இணைக்க ஜூன் 30 வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கும் நிலையில், ஆதாரை இணைக்காத பொதுமக்களுக்கு வரும் ஜூலை 1ம் தேதி முதல் ரேஷன் பொருட்கள் வழங்கப்படாது என முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ரேஷன் பொருட்கள்:
நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை உள்ளிட்ட பல்வேறு ரேஷன் பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், ரேஷன் கார்டு திட்டத்தில் பல்வேறு தரப்பிலிருந்து சில மோசடிகள் நடப்பதன் காரணத்தினால் கட்டாயமாக பொதுமக்கள் தங்களது ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைத்திருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. மேலும், உணவு மற்றும் பொது விநியோகத்துறை பொதுமக்களுக்கு ரேஷன் கார்டுடன் ஆதாரை இணைப்பதற்கு ஜூன் 30-ம் தேதி வரைக்கும் கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது.
ஆனால், ரேஷன் கார்டுடன் ஆதாரை இணைப்பதற்கு இன்னும் 30 நாட்கள் மட்டுமே இருப்பதால் முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது, ஜூன் 30-ம் தேதிக்குள் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காத பொதுமக்களின் ரேஷன் கார்டு ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும், ஜூலை 1 ஆம் தேதியிலிருந்து ரேஷன் பொருட்கள் பொது மக்களுக்கு வழங்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது, எப்படி ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது என்பதனை பார்க்கலாம்.
இந்தியாவில் ஆண்டுதோறும் வாக்காளர் பட்டியல் புதுப்பிப்பு – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
முதலில், uidai.gov.in என்கிற இணையதள பக்கத்திற்கு சென்று ‘Start Now’ என்பதை கிளிக் செய்யவும். பின்னர், முகவரி, மாவட்டம் ஆகிய அனைத்து விவரங்களையும் பதிவு செய்த பின்னர் ‘Ration Card Benefit’ என்பதை கிளிக் செய்ய வேண்டும். பின்னர், ஆதார் எண், ரேஷன் கார்டு எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் ஆகியவற்றை நிரப்பி OTP எண்ணையும் பதிவு செய்துவிட்டு submit கொடுத்தால் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைத்துவிடலாம்.