இந்தியாவில் தொடரும் மல்யுத்த வீரர்கள் போராட்டம் – விவசாய சங்கங்கள் ஆதரவு!
இந்தியாவில் மல்யுத்த வீரர்கள் பல நாட்களாக கோரிக்கை வைத்து வரும் நிலையில், அதனை ஏற்காமல் இருந்தால் ஜூன் 5ல் டெல்லி எல்லை முற்றுகையிடப்படும் என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன
போராட்டம் அறிவிப்பு
இந்தியாவில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பல நாட்களாக மல்யுத்த வீரர்கள் போராடி வருகின்றனர். அவர்களை தடுக்க அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். ஆனாலும் இந்த போராட்டம் சர்வதேச அரங்கில் பேசப்படாமல் இருக்கிறது. இருந்தாலும் தொடர் போராட்டம் மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது
தமிழகத்தில் 500 மதுபானக்கடைகள் மூடல் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
இந்நிலையில் மல்யுத்த வீரர்களின் கோரிக்கைகளை ஏற்காமல் இருந்தால் ஜூன் 5 ஆம் தேதி டெல்லி எல்லை முற்றுகையிடப்படும் என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. மேலும் டெல்லியில் பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் நுழைவது தடுக்கப்படும் என விவசாயிகள் சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. அதனால் விரைவில் இது குறித்து தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.