தமிழக கூட்டுறவு சங்கங்களில் 2257 காலிப்பணியிடங்கள் – டிச.24ல் எழுத்து தேர்வு!
தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 2,257 உதவியாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு நடைபெற இருக்கும் எழுத்து தேர்வு தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
எழுத்து தேர்வு
தமிழகத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் கூட்டுறவு பண்டகசாலை, நகர கூட்டுறவு வங்கி பணியாளர் கூட்டுறவு கடன் சங்கம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், வேளாண் விற்பனையாளர் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்கள் இயங்கி வருகின்றன. இந்த கூட்டுறவு சங்கங்களில் தற்போது 2,257 உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதில் சென்னையில் அதிகபட்சமாக 132 இடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆபரணத்தங்கத்தின் விலை அதிரடி உயர்வு – இன்றைய நிலவரம் இதோ!
அதே போல அரியலூர்-28, செங்கல்பட்டு – 73, கோவை – 110, திண்டுக்கல் 67, ஈரோடு 73, காஞ்சிபுரம் 43, கள்ளக்குறிச்சி 35, கன்னியாகுமரி 35, கரூர் 37, கிருஷ்ணகிரி 58, மயிலாடுதுறை 26, நாகப்பட்டினம் 8, நீலகிரி 88, ராமநாதபுரம் 112, சேலம் 140, சிவகங்கை 28, திருப்பத்தூர் 48, திருவாரூர் 75, தூத்துக்குடி 65, திருநெல்வேலி 65, திருப்பூர் 81, திருவள்ளூர் 74, திருச்சி 99, ராணிப்பேட்டை 33, தஞ்சாவூர் 90, திருவண்ணாமலை 76, கடலூர் 75, பெரம்பலூர் 10, வேலூர் 40, விருதுநகர் 45, தருமபுரி 28, மதுரை 75, நாமக்கல் 77, புதுக்கோட்டை 60, தென்காசி 41, தேனி 48, விழுப்புரம் 47 காலியிடங்கள் இருக்கிறது. இந்த காலியிடங்களுக்கான எழுத்து தேர்வு வருகிற டிசம்பர் 24 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.