நாட்டில் கடந்த ஆண்டை விட ஜிஎஸ்டி வருவாய் 12% அதிகரிப்பு – ஒன்றிய நிதித்துறை அமைச்சகம் அறிவிப்பு!
கடந்த 2022 ஆம் ஆண்டு ஜிஎஸ்டி வருவாயுடன் ஒப்பிடும் போது, இந்த ஆண்டு ஜிஎஸ்டி வருவாய் 12 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஒன்றிய நிதித்துறை அமைச்சகம் அறிவித்திருக்கிறது.
ஜிஎஸ்டி வருவாய்:
நாட்டில் கடந்த கடந்த 2022 ஆம் ஆண்டு ஜிஎஸ்டி வருவாயை விட 2023 மே மாதத்திற்கான ஜிஎஸ்டி வருவாய் 12 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஒன்றிய நிதித்துறை அமைச்சகம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, மே மாதத்தில் சரக்குகளின் இறக்குமதி வருவாய் 12 சதவீதம் அதிகரித்துள்ளதால் இந்த ஜிஎஸ்டி வருவாய் 12 சதவீதம் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது இறக்குமதி உட்பட உள்நாட்டு பரிவர்த்தனைக்கான ஜிஎஸ்டி வருவாய் 11 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் ஒன்றிய நிதித்துறை அமைச்சகம் அறிவித்திருக்கிறது.
ஆதாரில் இருக்கும் பழைய புகைப்படத்தை மாற்றுவது எப்படி? முழு விவரங்களுடன்!
மேலும், ஒவ்வொரு மாநிலத்திலும் ஜிஎஸ்டி வருவாய் மாநில வாரியான புள்ளி விவர பட்டியலும் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. இதில், தமிழ்நாடு வருவாய் அடிப்படையில் நான்காவது இடம் பிடித்திருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், மே மாதத்தில் மட்டுமே சரக்கு மற்றும் ஜிஎஸ்டி வருவாய் ₹1,57,090 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் மத்திய ஜிஎஸ்டி வருவாய் ₹28,411 கோடியாகவும், மாநில ஜிஎஸ்டி வருவாய் ₹35,828 கோடியாகவும், கூட்டு ஜிஎஸ்டி வருவாய் ₹81,363 கோடியாகவும் உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.