
மக்கள் கவனத்திற்கு…திருவண்ணாமலையில் சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன..!! ” அது என்னவென்பதை நீங்களே பாருங்கள்”..!
திருவண்ணாமலையில் அமைந்துள்ள அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருநாளானது ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று(டிசம்பர் 13) திருவண்ணாமலையில் ஏற்றப்படும் பரணி தீபம் மற்றும் மகா தீபத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு எந்த ஒரு போக்குவரத்து சிக்கல்களும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, திருவண்ணாமலையில் தீப திருநாளை முன்னிட்டு இன்று( டிசம்பர் 13) ஏராளமான பொதுமக்கள் அண்ணாமலையாரை தரிசிக்க படையெடுத்துள்ளதால், தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து 180 சிற்றுந்துகள் மூலம் அண்ணாமலையார் கோவிலுக்கு பக்தர்கள் அழைத்து வரப்பட்டு கொண்டிருக்கின்றனர். மேலும், பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு 10,110 முறை பேருந்துகளை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் திருவண்ணாமலையில் பேட்டி அளித்தபோது தெரிவித்துள்ளார்.

























