தமிழக கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
அரசு பள்ளியில் பயின்று மேற்படிப்பு தொடர நினைக்கும் மாணவியர்கள் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிக்க ஜூலை 10 வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது ஜூலை 18 வரைக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ரூ.1000 உதவித்தொகை:
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பு படிக்க நினைக்கும் மாணவியர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதாவது, மாணவியர்களின் மேற்படிப்பிற்காகவும், அவர்களின் இடை நிற்றலை தவிர்ப்பதற்காகவும், அரசு பள்ளிகளில் மாணவியர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த உதவித்தொகை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த கல்வியாண்டு முதலே அரசு பள்ளியில் பயின்ற மாணவிகளுக்கு நிதியுதவி அவர்களின் வங்கி கணக்கிற்கே நேரடியாக செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும், மாணவியர்கள் உயர்படிப்பை படித்து முடிக்கும் வரைக்கும் அவர்களின் வங்கி கணக்கிற்கு ரூ.1000 செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, மாணவியர்கள் கல்வி நிதியுதவி பெற்று வந்தாலும் கூட கூடுதலாக இந்த உதவித்தொகையையும் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, உதவித்தொகை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. மேலும், ரூ.1000 உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்க ஜூலை 10 தான் கடைசி நாள் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
TNUSRB PC தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!
அதன் பின்னர் கால அவகாசம் நீடிக்கப்பட்டு ஜூலை 18 ஆம் தேதி வரைக்கும் விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், காமராஜர் பிறந்தநாளான இன்று முதல் கல்லூரி மாணவியர்களுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுவரைக்கும் 3.58 லட்ச மாணவிகள் ரூ.1000 உதவித்தொகை பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளனர். மேலும், ரூ.1000 உதவித்தொகை பெற விரும்பும் மாணவிகள் www.penkalvi.gov.in என்கிற இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உதவித்தொகை தொடர்பான விவரங்களை பெற விரும்பினால் 14417 என்கிற மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டறிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.