உங்களுடைய பான் கார்டு மூலம் மோசடி நடந்துள்ளதா? நிவாரணம் பெறுவது எப்படி? முழு விவரம்!
இந்தியாவில் மக்கள் பலர் ஆன்லைன் பண பரிவர்த்தனை செய்ய தொடங்கிவிட்ட நிலையில் பான் கார்டு மூலமாக நடைபெறும் பண மோசடியை எப்படி தெரிந்து கொள்ளலாம் என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
பான் கார்டு
நாடு முழுவதும் மக்கள் பலர் ஆன்லைன் மூலம் பண பரிவர்த்தனை செய்யத் தொடங்கிவிட்டனர். அதனால் கையில் எந்த நேரமும் பணம் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அது மட்டுமில்லாமல் தொழில்நுட்ப வளர்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் அதனால் பிரச்சனைகளும் வந்த வண்ணம் இருக்கிறது. அதாவது நிதி பரிவர்த்தனைகள் செய்ய பான் கார்டு கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால் அது மூலம் பண மோசடி நடைபெறுகிறது. வருமான வரித்துறை மூலம் வழங்கப்படும் பான் கார்டில் உள்ள தனிப்பட்ட எண் ஒவ்வொரு குடிமகனுக்கும் வேறுபட்டது. இந்த பான் கார்டு நகல் பல இடங்களில் தேவைப்படுகிறது. அப்படி நீங்கள் கொடுக்கும் பான் கார்டை யார் பயன்படுத்தினாழும் அதை சுலபமாக நீங்கள் தெரிந்து கொள்ளலாம். அதாவது உங்களது வங்கி கணக்கு பரிவர்த்தனைகள் அனைத்தும் நீங்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
மின் பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – போதிய வைப்புத்தொகை கட்டாயம்.. இல்லையெனில் அபராதம்!
மேலும் நீங்கள் உங்களுடைய CIBIL ஸ்கோரையும் தொடர்ந்து சரிபார்க்க வேண்டும் CIBIL ஸ்கோரில் உங்களால் எடுக்கப்பட்ட கடன்-கிரெடிட் கார்டு போன்றவை பற்றிய தகவல்களும் இருக்கும். மேலும் உங்களுடைய வருமான வரி கணக்கையும் சரிபார்க்க வேண்டும். உங்களுடைய கணக்கில் தவறான பரிவர்த்தனை இருந்தால் நீங்கள் காவல்துறையில் புகார் அளிக்க வேண்டும். மேலும் வருமான வரித்துறைக்கு தெரிவிக்க வேண்டும். அதன் மூலம் உங்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.
Exams Daily Mobile App Download
Follow our Instagram for more Latest Updates